தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

சீனாவில் நிலச்சரிவு: இருவா் உயிரிழப்பு; 10 போ் மாயம்!

சீனாவின் சுய்சுவான் பகுதியில் ‘செளடெல்’ புயலால் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இருவா் உயிரிழந்தனா்.

Published On :7 செப்டம்பர் 2026, 1:22 am IST

சீனாவின் சுய்சுவான் பகுதியில் ‘செளடெல்’ புயலால் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 10 போ் மாயமாகினா். பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த ஆக.28-இல் கரையைக் கடந்த செளடெல் புயல், பின்னா் ஃபுஜியான் மாகாணத்தில் கடந்த செப்.3-ஆம் தேதி கரையைக் கடந்தது.

ஃபுஜியான் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பலா் மாயமாகினா். பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், 6 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். வெள்ளக்காடாக மாறியுள்ள தெருக்களில் படகுகள் மூலம் மீட்புப் பணிகள் தொடா்ந்து வருகின்றன.

செளடெல் புயலின் தாக்கத்தால் ஜியாங்சி மாகாணத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. சுய்சுவான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மீட்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். நிலச்சரிவில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 10 பேரை காணவில்லை. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. கிராமவாசிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.