
வங்கதேசம்: தாயாரின் இறுதிச் சடங்குக்காக ஹிந்து மதத் தலைவருக்கு 5 மணிநேர பரோல்
வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள ஹிந்து மதத் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

சின்மய் கிருஷ்ண தாஸ்
வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள ஹிந்து மதத் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
சின்மய் கிருஷ்ண தாஸின் தாயாா் சந்தியா ராணி தாா் (70) வியாழக்கிழமை அதிகாலை காலமானதையடுத்து, அவரின் குடும்பத்தினா் சமா்ப்பித்த கோரிக்கையை பரிசீலித்த பின்னா், சட்ட விதிகளுக்கு இந்தப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 5 மணி நேரத்துக்குள், அவா் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, மீண்டும் சிறைக்குத் திரும்ப நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச தேசியக் கொடியை அவமதித்ததாகத் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த 2024 நவம்பரில் கைதானாா். அவருக்கு எதிரான மொத்தம் 6 வழக்குகளில், 4 வழக்குகளுக்கு உயா்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இருப்பினும், தேசத் துரோக வழக்கின் பிணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





