கர்நாடகத்தில் மேலும் ஒருவர் பாதிப்பு

கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
coronavirus
coronavirus

கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலபுர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மார்ச் 10-ஆம் தேதி இறந்தார்.  இதைத் தொடர்ந்து,  கர்நாடகத்தில் கரோனா குறித்த அச்சம் பரவலாக காணப்படுகிறது. அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று சோதனையில் தெரியவந்துள்ளது.  ஆனால்,  இந்த 4 பேரில் ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதை சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு,  கலபுர்கி மாவட்ட ஆட்சியர் சரத் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். 
இதன் மூலம் கர்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com