ஜனவரி
11:திரையரங்குகளில் வெளியாகும் அதே தினத்தில் ஓடிடி தளத்திலும் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாகும் என்ற அறிவிப்புக்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
26: சூர்யா நடித்த "சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டி பிரிவில் பங்கேற்று பெருமையைப் பெற்றது.
பிப்ரவரி
3: இசையமைப்பாளர் இளையராஜா சென்னை தியாகராய நகரில் புதிய ஒலிப்பதிவு கூடத்தை தொடங்கினார்.
மே
15: கரோனா பொது முடக்கம் காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
ஜூன்
18: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்.
ஜூலை
2: ஒளிப்பதிவு சட்ட வரைவு மசோதாவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார் நடிகர் சூர்யா.
9: மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆகஸ்ட்
5: திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அஜித், தனது ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
23: திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்தது.
செப்டம்பர்
25: பாடகர் எஸ்.பி.பி.யின் முதலாமாண்டு நினைவு விழாவில் கண் கலங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா.
அக்டோபர்
4: "அண்ணாத்த' படத்தில் ரஜினிக்கு பாடிய பாடலையொட்டி, 45 ஆண்டு காலம் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி. என புகழாரம் சூட்டினார் நடிகர் ரஜினிகாந்த்.
25: 67-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இவ்விருதை வழங்கினார்.
நவம்பர்
1: திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி.
2: திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவது 2021-ஆம் ஆண்டில் அதிகரித்தது. அந்த வகையில், நவ. 2-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது நடிகர் சூர்யாவின் ஜெய் பீம். க/பெ.ரணசிங்கம், சார்பட்டா பரம்பரை, மண்டேலா, திட்டம் 2 (பிளான் பி), டிக்கிலோனா, சித்திரைச் செவ்வானம் உள்ளிட்ட பல படங்கள் ஓடிடியில் வெளியாகின.
டிசம்பர்
1: தன்னை யாரும் "தல' அடைமொழியிட்டு அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் நடிகர் அஜித்.