நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீட்டுத் தேதி!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் புதிய பாடல்...

News image
Updated On :22 ஜூலை 2026, 5:29 pm IST

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் வெளியாகும் சூர்யாவின் திரைப்படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், 40 வயது நாயகனுக்கும் 20 வயது நாயகிக்குமான காதல் கதையாக உருவாகியுள்ளதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Story image

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2-வது பாடலை வருகிற ஜூலை 25 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். நடிகர் கென் எழுதிய இப்பாடலை சூர்யா பாட, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

The release date for the second song from actor Suriya's film Viswanath and Sons has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.