கோலார் தங்கவயல், அக். 8: பாரத தங்கச் சுரங்க விவகாரத்தை முதல்வர் சதானந்தகெüடா மற்றும் மூத்த அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்று கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் தெரிவித்தார்.
கோல்டன் சிட்டி ரெக்ரியேஷன் கிளப் மற்றும் ஆர்.எல். ஜாலப்பா ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பில் கோலார் தங்கவயலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாமை தொடக்கி வைத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இதுபோன்ற மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான மருத்துவ முகாம்களை முன்னணி நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோலார் தங்கவயல் மக்களுக்கு வாழ்வளித்து வந்த பாரத தங்கச்சுரங்க நிறுவன விவகாரத்தில் கவனம் செலுத்துவேன். தங்கச்சுரங்கத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









