பெல்காம், பிப். 10: சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக அறிக்கையை தயாரித்ததுதான் நான் செய்த சிறந்தப் பணி என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
பெல்காமில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி விழாவில் அவர் பேசியது:
மாநில லோக் ஆயுக்த நீதிபதியாக பணியாற்றிய போது, சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக நான் தயாரித்து அளித்த அறிக்கைதான் எனது பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சுரங்க அறிக்கை தயாரித்தபோது அதற்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், நானோ, என் மனைவியோ அதற்கு இணங்கவில்லை.
ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
நாம் அனைவரும் சேர்ந்து ஊழலை ஒழிக்கத் தவறினால் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது.
அடுத்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறேன் என்றார்.
பின்னர், மாணவர்களுடன் ஹெக்டே கலந்துரையாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.