தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சுரங்க அறிக்கையை தயாரித்ததுதான் எனது சிறந்த பணி

பெல்காம், பிப். 10: சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக அறிக்கையை தயாரித்ததுதான் நான் செய்த சிறந்தப் பணி என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார். பெல்காமில் வியாழக்கிழமை நடைபெற்ற

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:06 pm

தினமணி

பெல்காம், பிப். 10: சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக அறிக்கையை தயாரித்ததுதான் நான் செய்த சிறந்தப் பணி என்று லோக் ஆயுக்த முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.

பெல்காமில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி விழாவில் அவர் பேசியது:

மாநில லோக் ஆயுக்த நீதிபதியாக பணியாற்றிய போது, சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பாக நான் தயாரித்து அளித்த அறிக்கைதான் எனது பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். சுரங்க அறிக்கை தயாரித்தபோது அதற்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், நானோ, என் மனைவியோ அதற்கு இணங்கவில்லை.

ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து ஊழலை ஒழிக்கத் தவறினால் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது.

அடுத்த இரண்டு, மூன்று தலைமுறைகளில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிடும் என்று நம்புகிறேன் என்றார்.

பின்னர், மாணவர்களுடன் ஹெக்டே கலந்துரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.