தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நடிகர் சத்யராஜை கண்டித்து ஏப்.28-இல் பெங்களூரில் முழு அடைப்பு

கன்னடர்களை இழிவாகப் பேசிய நடிகர் சத்யராஜை கண்டித்து, பெங்களூரில் ஏப். 28-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

News image
Updated On :21 ஏப்ரல் 2017, 3:18 am

தினமணி

கன்னடர்களை இழிவாகப் பேசிய நடிகர் சத்யராஜை கண்டித்து, பெங்களூரில் ஏப். 28-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரிப் பிரச்னை தொடர்பாக நடிகர் சத்யராஜ், கன்னடர்களையும், கன்னட சங்கங்களின் நிர்வாகிகளையும் இழிவாகப் பேசியுள்ளார். இது கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் வெளியாக உள்ளது. அதை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
 நடிகர் சத்யராஜ் தனது பேச்சிற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவரின் பேச்சை கண்டித்து வெள்ளிக்கிழமை (ஏப்.21) தமிழக-கர்நாடக எல்லையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஏப். 28-ஆம் தேதி பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்படாமல் கட்டுக்கோப்பாக இந்த போராட்டம் நடைபெறும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.