பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிப்.24-இல் அகில கர்நாடக பிராமணர் சங்க மாநாடு

பெங்களூரில் பிப். 24, 25-ஆம் தேதிகளில் அகில கர்நாடக பிராமணர் சங்கத்தின் பெங்களூரு பிரிவு சார்பில் மாநாடு நடைபெறுகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:34 am

DIN

பெங்களூரில் பிப். 24, 25-ஆம் தேதிகளில் அகில கர்நாடக பிராமணர் சங்கத்தின் பெங்களூரு பிரிவு சார்பில் மாநாடு நடைபெறுகிறது.
பெங்களூரு பத்திரிகையாளர்  சங்கத்தில் புதன்கிழமை அகில கர்நாடக பிராமணர் மகா சபையின் தலைவர் கே.என்.வெங்கடநாராயணா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
அகில கர்நாடக பிராமணர் சங்கத்தின் பெங்களூரு பிரிவின் 2 நாள் மாநாடு பெங்களூரு பசவனகுடி நேஷனல் கல்லூரித் திடலில் பிப். 24-ஆம் தேதி தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பிராமணர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்க கோரிக்கை வைக்கப்படும். 
பிராமணர் மகாசபையில் சார்பில் கல்வி மையம் தொடங்க 10 ஏக்கர் நிலம், ரூ. 10 கோடி நிதி வழங்கவும் கோரிக்கை வைக்கப்படும். மாநாட்டையொட்டி பிப். 25-ஆம் தேதி மாலை இசை கச்சேரி நடைபெறும் என்றார் அவர். நிகழ்ச்சியில் மகாசபையில் துணைத் தலைவர் கிருஷ்ணா, பிரசார அணித்தலைவர் அர்ஜுன் ஜன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.