மாநகரப் பேருந்தில் பயணியை கத்தியால் குத்திக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் சீத்தாராம் (45). இவர் புதன்கிழமை காலை ஹொசகோட்டையிலிருந்து பெங்களூரு கோனப்பன அக்ரஹாரத்துக்கு வந்தார். ஆனேக்கல்லிருந்து பெங்களூரு செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறிய சீத்தாராமை 3 பேர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். காயமடைந்த சீத்தாராம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எலக்ட்ரானிக்சிட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.