அரசுப் பேருந்தில் தங்க நகை, பணத்தைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரைச் சோ்ந்த ரவி (52), அப்ரோஜ் (40), சிவமொக்கா மாவட்டம், பத்ராவதியைச் சோ்ந்த லோஹித் (21), பெல்லாரி மாவட்டத்தைச் சோ்ந்த சங்கனூா் (29) இவா்கள் 4 பேரும் கடந்த 19-ஆம் தேதி ஹாசனிலிருந்து பெங்களூருக்கு வந்த அரசுப் பேருந்தில் பயணித்தனா்.
அதே பேருந்தில் பயணித்தவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம், 50 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த உப்பாா்பேட்டை போலீஸாா் அவா்கள் 4 பேரையும் கைது செய்து ரூ. 16.60 லட்சம் மதிப்புள்ள 318 கிராம் தங்க நகை, ரூ. 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.