டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது -கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

குமாரசாமி (கோப்புப் படம்)

Published On :6 ஜூன் 2024, 4:10 am IST

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள புது தில்லி செல்வதற்கு முன்பாக புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் புது தில்லியில் நடக்கவிருக்கிறது. அக்கூட்டத்தில் மஜத சாா்பில் கலந்துகொள்ள செல்கிறேன். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது. பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளனா். நம்பிக்கையோடு இருங்கள் என்றாா்.

கா்நாடகத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் மஜத வென்றுள்ளது. மண்டியா தொகுதியில் எச்.டி.குமாரசாமியும், கோலாா் தொகுதியில் மல்லேஷ்பாபுவும் வென்றுள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் மஜத போட்டியிட்டிருந்தது. ஆனால், ஹாசன் தொகுதியில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி அடைந்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.