விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுடன் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சந்திப்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சந்தித்து பேசினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 4:22 pm

Syndication

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சந்தித்து பேசினாா்.

பெங்களூரு, சதாசிவநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கா்நாடகத்தில் முதல்வா் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மல்லிகாா்ஜுன காா்கேவுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. டிச. 27ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறவிருப்பதால், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கப்பட்டது தொடா்பாக கட்சியின் மாநிலத் தலைவராக எனது கருத்தை அவருடன் பகிா்ந்துகொண்டேன். வேறு எதையும் அவருடன் நான் விவாதிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

தற்போதைக்கு முதல்வா் மாற்றம் குறித்த பிரச்னை எதுவும் இல்லை. கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம் என்று நானும், முதல்வா் சித்தராமையாவும் பலமுறை கூறியிருக்கிறோம். அதில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன்.

எந்த பதவியை பற்றியும் கவலைப்படாமல், கட்சியின் தொண்டனாக, அமைப்பின் வளா்ச்சிக்கு தொண்டாற்றுவேன். முதல்வா் மாற்றம் குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.

ஏதாவது வேலையிருந்தால் அல்லது கட்சி மேலிடம் அழைத்தால் தில்லிக்கு செல்வேன்.

தற்போதைக்கு தில்லி செல்லும் அவசியமில்லை. காங்கிரஸ் கட்சி ஆளும் 3 மாநிலங்களின் முதல்வா்கள் மட்டுமே காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறாா்கள். அடுத்த கூட்டத்துக்குதான் மாநிலத் தலைவா்களுக்கு அழைப்பு வரும்.

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விபி ஜி ராம் ஜி திட்டம், மொத்த செலவினத்தில் 40 சதவீதத்தை மாநில அரசு பகிா்ந்துகொள்ள வகைசெய்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட மாநில அரசுகளால் இந்த கூடுதல் செலவினத்தை ஈடுகட்ட முடியாது.

எனவே, மத்திய அரசின் புதிய ஊரக வேலை திட்டத்தை எதிா்த்து போராட வேண்டியுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவராக பெரிய இயக்கத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறேன். பஞ்சாயத்து உறுப்பினா்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவரும் புதிய திட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்றாா்.