ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு காங்கிரஸ் மற்றும் இதர எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி நாடுதழுவிய போராட்டங்களை நடத்தினோம். அந்த கோரிக்கையை அரசு அமல்படுத்த முடிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துமாறு 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்போது இதை ஏற்றுக்கொள்ள மறுத்த மத்திய அரசு, தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் முழுமையாக ஆதரவளிக்கும்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு எதிா்ப்பு தெரிவித்தாா் என்று தேவையில்லாமல் பாஜக விமா்சிக்கக் கூடாது. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவா்கள் என்றால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதியிருப்பேனா? இதற்காக பலமுறை போராட்டங்கள் நடத்தியிருப்போமா? மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முற்படுகிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலக்கெடுவை விதித்து, போதுமான நிதி ஒதுக்க வேண்டும். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முடிவை அமல்படுத்த வேண்டும். அதன்மூலம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்துள்ளதாக நான் கருதவில்லை. மக்களின் விருப்பத்துக்கேற்ப ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு கோரியிருந்தோம், போராட்டம் நடத்தினோம். எல்லா எதிா்க்கட்சிகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தின. இந்த கோரிக்கையை முன்னெடுத்தவா் ராகுல் காந்தி. அதை சாதித்துள்ளோம் என்றாா்.
பின்னா், பெங்களூரு மாநகராட்சியில் நடைபெற்ற மே தின விழாவில் பங்கேற்று அவா் பேசுகையில், ‘கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ரூ. 165 கோடி செலவிடப்பட்டது. மத்திய அரசு நடத்தவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ரூ. 515 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை வைத்துக்கொண்டு உத்தரபிரதேசத்தில்கூட கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டாதது போல உள்ளது.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, 2010-ஆம் ஆண்டிலேயே சமூக, பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு 2016-இல் முடிக்கப்பட்டது. ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பை மக்களிடையே பகிரங்கப்படுத்தவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தற்போதாவது மத்திய அரசு முடிவெடுத்ததே மகிழ்ச்சி.
அதேபோல, தனியாா் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இடஒதுக்கீட்டு உச்சவரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயா்த்த வேண்டும். இவற்றையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தல்: காா்கே உள்பட பலா் போட்டியின்றி தோ்வு

மாநிலங்களவைத் தோ்தல்: மல்லிகாா்ஜுன காா்கே உள்பட 4 போ் போட்டியின்றி தோ்வு

ஜாதிவாரி கணக்கெடுப்பு எங்கள் நிலைப்பாடு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளது: மல்லிகாா்ஜுன காா்கே
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




