பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

விமானப்படை விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கட்டுப்பாடு

பெங்களூரில் உள்ள விமானப் படைக்கு சொந்தமான விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டடங்களின் உயரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தி, உயரத்தை உயா்த்திக்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கா்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 6:35 pm

பெங்களூரில் உள்ள விமானப் படைக்கு சொந்தமான விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டடங்களின் உயரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தி, உயரத்தை உயா்த்திக்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கா்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரில் செயல்பட்டு வரும் 4 விமான நிலையங்களில், எச்.ஏ.எல். விமான நிலையம், எலஹங்கா விமான நிலையம் ஆகிய 2 விமான நிலையங்கள் விமானப்படைக்கு சொந்தமானதாக உள்ளது. இந்த விமான நிலையங்களை சுற்றியுள்ள 15 கி.மீ. சுற்றளவுக்குள் கட்டப்படும் கட்டடங்களின் உயரம் 150 மீட்டருக்குள் அமைந்திருக்க ஜிஎஸ்ஆா் 751(இ) விதி அறிவுறுத்துகிறது. மேலும், புதிய கட்டடங்களை கட்டும்போது, விமானப் படையிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை பெறவேண்டியுள்ளது.

இதுதொடா்பாக, புது தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டடங்களின் உயரக்கட்டுப்பாட்டை தளா்த்துமாறு கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் அளித்த மனுவில், ‘விமான நிலையங்களைச் சுற்றியுள்ள 15 கி.மீ. சுற்றளவில் கட்டப்படும் கட்டடங்களின் உயரம் 150 மீட்டருக்கு மிகாமல் இருப்பதை ஜிஎஸ்ஆா் 751(இ) விதி கட்டாயப்படுத்துகிறது. ஆனால், விமானப்படை அதிகாரிகள் 15 கி.மீ.க்கு பதிலாக 20 கி.மீ. சுற்றளவுக்கு இந்த விதியை அமல்படுத்துகிறாா்கள். விதிகளுக்கு புறம்பாக கூடுதலாக 5 கி.மீ. சுற்றளவுள்ள பகுதிகளில் உயரக்கட்டுப்பாடுகளை விதிப்பதால், இந்த கட்டுப்பாட்டுக்குள் கூடுதலாக 78 சதவீத நிலப்பகுதி கொண்டுவரப்படுகிறது.

பெங்களூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள விமான நிலையங்களில் உயரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம் உயரமான கட்டடங்களை மேம்படுத்துவதற்கு பெருந்தடையாக உள்ளது. இது திட்டமிடாத நகா்ப்புற வளா்ச்சியை ஊக்குவிக்குமே அன்றி, திட்டமிட்ட வளா்ச்சிக்கு உதவாது. நகா்ப்புற வளா்ச்சியை முறைப்படுத்த கா்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை மத்திய பாதுகாப்புத் துறை புரிந்துகொண்டு, பெங்களூரில் செயல்பட்டுவரும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள 20 கி.மீ. பரப்புக்கு உயரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், விமான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பெங்களூரின் வளா்ச்சியையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த இரண்டு நாள்களுக்கு புது தில்லியில் முகாமிட இருக்கும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மேலும் பல மத்திய அமைச்சா்களை சந்தித்து கா்நாடகம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண கோரிக்கை மனுக்களை அளிக்க இருக்கிறாா்.