சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தந்தம், சிறுத்தை தோல் விற்பனை: 6 பேர் கைது

இரு வேறு இடங்களில் யானை தந்தம், சிறுத்தைத் தோல் ஆகியவற்றை விற்பனை செய்ய முயன்றதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:05 am IST

இரு வேறு இடங்களில் யானை தந்தம், சிறுத்தைத் தோல் ஆகியவற்றை விற்பனை செய்ய முயன்றதாக,  6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஹாசன் மாவட்டத்துக்குள்பட்ட  சக்லேஷ்புராவைச் சேர்ந்தவர்கள் நாகேஷ் (48), கிருஷ்ணராஜ் (54), ஹொளேநரசிப்புராவைச் சேர்ந்தவர் பிரதாப் (27).  மூவரும் பெங்களூரில் அண்மையில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றனராம். தகவல் அறிந்த கொடிகேஹள்ளி போலீஸார் 3 பேரையும் கைது செய்து,  15 கிலோ எடையுள்ள 2 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்:  தேவிநகர் வெளிவட்டச்சாலை அருகே சிறுத்தை தோலை விற்பனை சிலர் முயற்சிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற கொடிகேஹள்ளி போலீஸார், சிறுத்தை தோலை விற்பனை செய்ய முயன்றதாக,  பெல்லாரி மாவட்டம் அப்பனஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ் (30), பாபண்ணா (27), பசவராஜ் (48) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு சிறுத்தைத் தோல், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.