இரு வேறு இடங்களில் யானை தந்தம், சிறுத்தைத் தோல் ஆகியவற்றை விற்பனை செய்ய முயன்றதாக, 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஹாசன் மாவட்டத்துக்குள்பட்ட சக்லேஷ்புராவைச் சேர்ந்தவர்கள் நாகேஷ் (48), கிருஷ்ணராஜ் (54), ஹொளேநரசிப்புராவைச் சேர்ந்தவர் பிரதாப் (27). மூவரும் பெங்களூரில் அண்மையில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றனராம். தகவல் அறிந்த கொடிகேஹள்ளி போலீஸார் 3 பேரையும் கைது செய்து, 15 கிலோ எடையுள்ள 2 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்: தேவிநகர் வெளிவட்டச்சாலை அருகே சிறுத்தை தோலை விற்பனை சிலர் முயற்சிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற கொடிகேஹள்ளி போலீஸார், சிறுத்தை தோலை விற்பனை செய்ய முயன்றதாக, பெல்லாரி மாவட்டம் அப்பனஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ் (30), பாபண்ணா (27), பசவராஜ் (48) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு சிறுத்தைத் தோல், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









