நிலத் தகராறில் இருவருக்கு ஏற்பட்ட மோதலில், துப்பாக்கியால் சுட்டத்தில் விவசாயி காயமடைந்தார்.
பெங்களூரு ஊரகப் பகுதியான ஆனேக்கல் வட்டம் லிங்கசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சாதப்பாவுக்கும் இடையே நீண்ட நாள்களாக, நிலத் தகராறு இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ராமு தனது நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சாதப்பா தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ராமுவை நோக்கிச் சுட்டாராம். இதில் ராமுவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சாதப்பா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
காயமடைந்த ராமு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜிகினி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

