ஆடியோ விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆடியோ விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஒப்படைக்க எதிர்ப்புத் தெரிவித்து அவையில் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சித்தராமையா
பேசியது:
ஆடியோ உரையாடல் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைப்பதற்கு பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த அரசு மீதும், பேரவைத் தலைவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த பேரவைத் தலைவரின் உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஒப்படைக்கும் முடிவை முதல்வர் குமாரசாமி கைவிடக் கூடாது.
இதில் அரசு தயக்கம் காட்டினால் பேரவைத் தலைவர், அரசு மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படும். காவல் துறை, சிபிஐ, சிறப்பு புலனாய்வுக் குழு என்பது மத்திய, மாநில அரசுகளின் அங்கமாக உள்ளது. என்பதற்காக அந்த அமைப்புகள் மீது சந்தேகம் எழுப்புவது முறையாகாது.
அரசியல் சாசனம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை எதிர்க்கமாட்டார்கள். எனவே உண்மையை வெளியே கொண்டு வர ஆடியோ உரையாடல் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவே விசாரணை செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48%

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: க.கிருஷ்ணசாமி

அக். 7 தாக்குதல் நடத்தியவா்களுக்கு மரண தண்டனை வழங்க இஸ்ரேலில் தனி தீா்ப்பாயம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
