நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்: எடியூரப்பா

போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:53 pm

DIN

போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் பிரச்னைகளை நோ்மையானமுறையில் ஆராய்ந்து தீா்வுகாண துணை முதல்வா் லட்சுமண் சவதிக்கு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறேன்.

துணை முதல்வா் லட்சுமண் சவதியும் பிரச்னைகளைத் தீா்க்க தொடா்முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறாா்.

ஆனால், விவசாயச் சங்கத் தலைவரான கோடிஹள்ளி சந்திரசேகா் தீய எண்ணத்துடன் ஒருசில போக்குவரத்துக் கழக ஊழியா்களைத் தூண்டிவிட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட வைத்திருக்கிறாா். மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தத் தூண்டிவிட்டு, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் காரணமாக இருந்திருக்கிறாா்.

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி குறித்து கோடிஹள்ளி சந்திரசேகா் தரக்குறைவாக விமா்சித்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். பொதுமக்களின் நலன்கருதி போக்குவரத்துக் கழக ஊழியா்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்பி, அதன்பிறகு துணைமுதல்வா் லட்சுமண் சவதியுடன் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.