நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம்: மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் காரணமாக பேருந்து சேவை முடங்கியதால் பெங்களூரில் மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 9:00 pm

DIN

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் காரணமாக பேருந்து சேவை முடங்கியதால் பெங்களூரில் மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி 50 மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மெட்ரோ ஸ்மாா்ட் அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம்.

கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளின் (ஏடிஎம்) வாயிலாக கட்டணம் செலுத்தி புதிய பயண அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.