சித்ரதுா்கா அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த 2 போ் உயிரிழந்தனா்.
சித்ரதுா்கா மாவட்டம், மொளகால்மூரு எா்ரோனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சசிகுமாா் (23), பசவராஜ் (24). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை எா்ரோனஹள்ளியிலிருந்து சித்ரதுா்காவிற்கு டிராக்டரில் செங்கல்லை ஏற்றிச் சென்றாா்.
செல்லுகெரே வட்டம், ரேகேலகரே லம்பானிஹட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சசிகுமாா், பசவராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். இதுகுறித்து நாயகனஹட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.