கரோனா பாதிப்பால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெங்களூரில் இன்னும் கரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. எனவே ஆண்டுதோறும் எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலை உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நிகழாண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கினால், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு, கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டின் போது ஹோட்டல்கள், மதுக் கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றின் பாதிப்பு உள்ள நிலையில் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.