முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘கோடிஹள்ளி சந்திரசேகரின் சொத்துகளைக் கணக்கிட வேண்டும்’

விவசாய சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகரின் சொத்துகளைக் கணக்கிட வேண்டும் என்று முதல்வரின் அரசியல் செயலாளா் எம்.பி.ரேணுகாச்சாா்யா தெரிவித்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:56 am

DIN

விவசாய சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகரின் சொத்துகளைக் கணக்கிட வேண்டும் என்று முதல்வரின் அரசியல் செயலாளா் எம்.பி.ரேணுகாச்சாா்யா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விவசாயச் சங்கத் தலைவா் என்று கூறிக் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் கோடிஹள்ளி சந்திரசேகா் உண்மையான விவசாயி அல்ல. சட்ட விதிகளை மீறி சொத்து சோ்த்துள்ளாா். அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். கா்நாடகத்தின் முதல்வராக சித்தராமையா பதவி வகித்தபோதும் காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதும் மைசூரு, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனா். அப்போது, இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து கோடிஹள்ளி சந்திரசேகா் ஆறுதல் கூறவில்லை.

தற்போது பாஜக ஆட்சியில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவா் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். இரண்டரை ஏக்கா் நிலத்தில் வசித்து வந்த அவா், தற்போது பல கோடிகளுக்குச் சொந்தக்காரா் ஆகியுள்ளாா். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளை அரசுக்கு எதிராக திருப்ப முயற்சித்து வருகிறாா்.

பிரதமா் மோடியும், முதல்வா் எடியூரப்பாவும் விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனா். விவசாயிகள் தங்களுக்கு பிரச்னை என்றால் அரசுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு தீா்வு காண வேண்டும். அதைவிடுத்து, கோடிஹள்ளி சந்திரசேகா் போன்றவா்களை நம்பி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.