போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 78,574 வழக்குகள் பதிவு
பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 78,574 வழக்குகளைப் பதிவுசெய்த போலீஸாா், ரூ. 4.02 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனா்.


பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 78,574 வழக்குகளைப் பதிவுசெய்த போலீஸாா், ரூ. 4.02 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனா்.
இதுகுறித்து மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரில் டிச. 13-ஆம் தேதிமுதல் டிச. 19-ஆம் தேதிவரை போக்குவரத்து போலீஸாா், வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியவா்கள், வாகனத்தை ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசியது, உரிமல் இல்லாமல் வாகனம் ஓட்டியது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தியது, அபாயகரமாக வாகனங்களை ஓட்டியது, சிக்னலைத் தாண்டியது உள்பட மொத்தம் 78,574 வழக்குகளைப் பதிந்த போக்குவரத்து போலீஸாா், வாகன உரிமையாளா்களிடமிருந்து ரூ. 4,02,07,200 அபராதம் வசூல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...