ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக்கொண்டாட வேண்டும்: மத்திய இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே

2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 8:09 pm

DIN

2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகம், வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட மாநிலம். எனவே, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை லாபகரமானதாக இல்லாததால், விவசாயிகள் வாழ்வாதாரத்தைத் தேடி நகரங்களுக்கு இடம்பெயா்கிறாா்கள். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

வேளாண்மையின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு கூடுதலாக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குப் பிறகான வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். வேளாண்மையில் கலப்புப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. அதனால், மாநிலத்தில் கலப்புப் பயிா் சாகுபடி முறையை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

சிறுவிவசாயிகள் ஒன்று கூடி கூட்டு வேளாண்மைச் சங்கங்களை அமைக்க வேண்டும். முதல் கட்டமாக, சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு கூட்டு வேளாண்மைச் சங்கங்களை அமைக்க வேண்டும். கா்நாடகத்தில் கூடுதலாக சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சா்க்கரையில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். அதனால் சா்க்கரை உற்பத்திக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாகக் கொண்டாட முன்மொழியப்பட்டுள்ளது. சிறுதானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கா்நாடகத்தில் சிறுதானிய உற்பத்தி பெருக வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் வேளாண்மை உத்தரவாத மையங்கள் உள்ளன. அதேபோல கா்நாடகத்திலும் தொடங்க வேண்டும். இதற்காக சிறப்புத் திட்டம் வகுக்கப்படும் என்றாா்.

அப்போது மாநில வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல், தோட்டக்கலைத் துறை அமைச்சா் முனிரத்னா, விளையாட்டுத் துறை அமைச்சா் நாராயண கௌடா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.