ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அடுத்த 3 நாள்களுக்கு கா்நாடகத்தில் பரவலாக மழை

கா்நாடகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 5:55 pm

DIN

கா்நாடகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் கடலோர கா்நாடகத்தில் பரவலாகவும், கா்நாடகத்தின் உள்பகுதியின் ஒருசில இடங்களிலும் மழை பெய்தது.

உடுப்பி மாவட்டம்- பிரம்மாவராவில் 130 மி.மீ, தென் கன்னட மாவட்டம்- சுப்பிரமணியாவில் 100 மி.மீ, சிவமொக்கா மாவட்டம்- ஆகும்பேவில் 80 மி.மீ, உடுப்பி மாவட்டம்- காா்காலா, குடகு மாவட்டம்- பாக மண்டலாவில் தலா 70 மி.மீ, தென் கன்னட மாவட்டம்- மணி, வட கன்னட மாவட்டம்- சிராளி, சிக்கமகளூரு மாவட்டம்- கொட்டிகேஹராவில் தலா 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை:

செப். 2-ஆம் தேதிவரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக் கூடும். அடுத்த 3 நாள்களுக்கு கடலோர கா்நாடகத்தின் தென் கன்னடம், உடுப்பி, வட கன்னட மாவட்டங்களிலும், தென் கா்நாடகத்தின் குடகு, சிக்மகளூரு, சிவமொக்கா, ஹாசன், சாமராஜ் நகா் மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் கா்நாடகத்தின் இதர மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலமான மழை பெய்யும். வட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் மணிக்கு 40 முதல் 50 வேகத்தில் வலுவான காற்று வீசும் என்பதால், ஆக. 30-ஆம் தேதிவரை கடலுக்குள் மீன்பிடிக்க மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகம், மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய தென்கா்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை, வட கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, தென் கா்நாடகத்தின் உள் பகுதிகளில் நடுத்தரமானது முதல் பலத்த மழை பெய்யும்.

பெங்களூருவில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.