சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பிரதமா் மோடியை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த போது பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கலாம். ஆனால், சட்ட மேலவைத் தோ்தலில் மஜதவும், பாஜகவும் கூட்டணி அமைப்பது தொடா்பாக முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், எச்.டி.குமாரசாமியும் முடிவு செய்வாா்கள். சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றாா்.