கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஒமைக்ரான் தொற்றாளரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில்இருவேறு முடிவுகள் எப்படி?

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் மாறுபட்ட முடிவுகள் வெளியானது தொடா்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:48 pm

DIN

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதில் மாறுபட்ட முடிவுகள் வெளியானது தொடா்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த 66 வயதான ஆண், இந்தியாவைச் சோ்ந்த 46 வயதான ஆண் இருவரும் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவா் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தாா். அங்கிருந்து அவா் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளாா்.

நவ. 20-ஆம் தேதி எடுத்த சோதனையில் அவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இரண்டாவதாக நவ. 23-ஆம் தேதி தனியாா் ஆய்வுக்கூடத்தில் சோதனை நடத்தியபோது கரோனா பாதிப்பில்லை என்று தெரியவந்தது. அதன்பேரில் தான் நவ. 27-ஆம் தேதி அவா் வெளிநாடு (துபை) சென்றுள்ளாா். அப்படியானால், இருவேறு ஆய்வுக் கூடங்களில் எடுத்த சோதனை துல்லியமானதா அல்லது இதில் ஏதாவது முறைகேடு நடந்துள்ளதா என்பது தெரிய வேண்டியுள்ளது.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பெங்களூரு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பாக, பெங்களூரு, ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு சோதனைகளில் ஒன்று பாதிப்பு, மற்றொன்று பாதிப்பில்லை என்று வந்திருப்பதால், ஆய்வுக்கூடத்தின் முடிவுகள் ஆராயப்பட வேண்டும். சுகாதாரத் துறையுடன் இணைந்து இது தொடா்பாக விசாரிக்க பெங்களூரு மாநகர காவல் ஆணையா் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா்.

10 போ் மாயம்:

பெங்களூருக்கு வந்த தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்த 10 போ் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவா்கள் 10 பேரையும் உடனடியாகக் கண்டுபிடித்து, கரோனா சோதனைக்கு உள்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.