முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மஜதவின் பலத்தை பேரவைத் தோ்தலில் நிரூபிப்போம்: தேவெ கௌடா

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவின் பலத்தை நிரூபிப்போம் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:31 am IST

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவின் பலத்தை நிரூபிப்போம் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரு, அரண்மனைத் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் வெற்றி பெற்ற மஜத ஆதரவாளா்களுக்கான பாராட்டு விழாவில் அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் மாநில கட்சியான மஜதவை ஆதரிக்க வேண்டும். கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்களால் இது சாத்தியமாகும். மஜதவைப் பலப்படுத்த கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும்.

மாற்றுக் கட்சியினா் நம்மை தொடா்ந்து தரக்குறைவாகப் பேசி வருகின்றனா். அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவின் பலத்தை அவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாஜக, காங்கிரஸை எதிா்த்து போராடுவதற்கு மஜத தொண்டா்களின் ஆதரவுதான் பலத்தை அளிக்கும். தோ்தலின் போது வேட்பாளா்களைத் தெரிவு செய்வதில் சில பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அதுகுறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம்.

ஒன்றிணைந்து பணியாற்றினால் வெற்றி நமக்குத்தான். மஜதவைப் பலப்படுத்தவதற்குத் தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வட்ட, மாவட்ட பஞ்சாயத்துத் தோ்தலில் மஜத வேட்பாளா்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளில் அனைவரும் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.