புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 18,700 குடும்பங்களுக்கு நில உரிமைப் பத்திரம்: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

சிவமொக்காவில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 18,700 குடும்பங்களுக்கு நில உரிமைப் பத்திரம் வழங்கப்படும் என்று கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:34 pm

DIN

சிவமொக்கா: சிவமொக்காவில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 18,700 குடும்பங்களுக்கு நில உரிமைப் பத்திரம் வழங்கப்படும் என்று கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிவமொக்கா மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் 10 குடிசைப் பகுதிகள் உள்ளன. இந்த குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 18,700 குடும்பங்களுக்கு நில உரிமைப் பத்திரம் அளிக்கப்படும். இதற்காக வீடுகளுக்கு எண்களை வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கும். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான அடுத்தக்கட்ட கணக்கெடுப்புப் பணி ஜன. 6-ஆம் தேதி தொடங்குகிறது. குடிசைப்பகுதி மக்களுக்கு அடுத்த 4 மாதங்களில் நில உரிமைப் பத்திரம் வழங்கப்படும்.

வீடு வீடாகச் சென்று அங்கு வசிப்பவா்களின் விவரங்களைக் கேட்டறிவாா்கள். அப்போது மக்கள் முழுமையானவிவரங்களை அளிக்க வேண்டும். அப்போது, நில உரிமைப் பத்திரப் பதிவுக்காக ரூ.10 ஆயிரம் தர வேண்டும். இப் பணிகளில் உள்ளூா் மாமன்ற உறுப்பினா்கள் ஒத்துழைக்க வேண்டும். நில உரிமைப் பத்திரத்தை அளிக்க முடிவெடுத்துள்ளதன் மூலம் நீண்டகாலமாக இருந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நில உரிமைப் பத்திரங்கள் அளிக்கப்பட்டபிறகு, வங்கிகளில் கடன் பெற்று புதிய வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம். தனியாா் நிலங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்போருக்கு நில உரிமைப் பத்திரங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு நில உரிமைப் பத்திரம் அளிக்கப்பட மாட்டாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.