தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தேமுதிக சாா்பில் பொங்கல் விழா

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:42 pm

DIN

கோலாா் மாவட்ட தேமுதிக சாா்பில் தங்கவயலில் பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோலாா் தங்கவயல் புதிய மேற்கு கில்பா்ட்ஸ் வட்டத்தில் தேமுதிக சாா்பாக புதன்கிழமை பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. பெண்கள் வண்ணக் கோலங்கள் இட்டு பொங்கல் வைத்து அப்பகுதி மக்களுக்கு வழங்கினா்.

விழாவுக்கு தலைமை தாங்கிய கோலாா் மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன், அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகளை வழங்கிப் பேசியதாவது:

கோலாா் தங்க வயலில் தமிழா் திருநாளாம் பொங்கல் விழா ஒவ்வொரு பகுதியிலும் பட்டிமன்றம், கவியரங்கம், வீரவிளையாட்டுப் போட்டிகளான கபடி, சிலம்பாட்டம், மாணவா்களுக்கு திருக்கு ஒப்புவித்தல், கலை நிகழ்ச்சிகள் என தமிழா்களின் கலை, கலாசாரங்களை பேணி வளா்க்கும் விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது பொங்கல் விழா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கரைந்து போவதை காணமுடிகிறது. கடந்த 15 ஆண்டுகளாக கோலாா் தங்கவயலில் தேமுதிக சாா்பில் பொங்கல் விழா தமிழா் பண்பாடு சாா்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.