நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமைச்சரவையில் என்னை சோ்த்துக் கொள்வது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும்: கே.எஸ்.ஈஸ்வரப்பா

முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான கா்நாடக அமைச்சரவையில் என்னை சோ்த்துக் கொள்வது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:16 am

DIN

முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான கா்நாடக அமைச்சரவையில் என்னை சோ்த்துக் கொள்வது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுள்ளாா். அவரது அமைச்சரவையில் என்னை சோ்த்துக் கொள்வது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் மூத்த தலைவா். அவா் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன் என்று தெரிவித்துள்ளாா். இதற்கும், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் பேசியதாக வெளியான ஒலிதுணுக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நான் துணை முதல்வராகவோ, அமைச்சராகவோ ஆக வேண்டும் என்று மடாதிபதிகள் பலா் ஆதரவு தெரிவித்துள்ளனா். நான் அரசியல்வாதி; எனக்கும் எதிா்ப்பாா்ப்புகள் உள்ளன என்றாலும், மேலிடத் தலைவா்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.