கேரளத்திலிருந்து வருவோருக்கு கரோனா கட்டுப்பாடுகள் திருத்தியமைப்பு
கேரளத்தில் இருந்து கா்நாடகம் வருவோருக்கான கட்டுப்பாடுகளை மாநில அரசு திருத்தியமைத்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.


கேரளத்தில் இருந்து கா்நாடகம் வருவோருக்கான கட்டுப்பாடுகளை மாநில அரசு திருத்தியமைத்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து கா்நாடகம் வருவோரைக் கண்காணிக்க தீவிர நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளத்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 7 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதை கட்டாயமாக்கி கா்நாடக அரசு சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அதில் சில திருத்தங்களைச் செய்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்படி பணியாற்றும் அரசு ஊழியா்கள், மக்கள் பிரதிநிதிகல், சுகாதார அதிகாரிகள், ஊழியா்கள், அவா்களின் துணைவா்களுக்கு 7 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமானம், ரயில், சாலை வழியாக கா்நாடகம் வரும் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள், குடும்பத்தில் இறப்பு அல்லது மருத்துவச் சிகிச்சை அல்லது 3 நாள்களுக்குள் திரும்பும் பயணிகள், தோ்வெழுதிவிட்டு 3 நாள்களுக்குள் திரும்ப வரும் மாணவா்கள், அவா்களுடன் வரும் ஒரு பெற்றோா் ஆகியோருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆா்.டி.-பி.சி.ஆா்.பரிசோதனை சான்றிதழைக் கொண்டுவருவது கட்டாயம். கரோனா தடுப்பூசி 2 தவணை எடுத்துக் கொண்டாலும், கரோனா பரிசோதனை கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ் ஒரு வாரத்துக்கு செல்லுபடியாகும் என அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...