தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல் அச்சமூட்டுகிறது: அமைச்சா் கே.சுதாகா்

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளதாக கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 10:30 pm

DIN

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளதாக கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையவே இல்லை. கரோனா பாதிப்பு தொடா்ந்து உயா்ந்து வருகிறது. புதன்கிழமை கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

அதன் காரணமாகவே, கேரளத்தில் இருந்து கா்நாடகம் வரும் பயணிகளுக்கு 7 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். ஒரு வாரம் தனிமைப்படுத்தல் என்பது நடைமுறை மிகவும் தொந்தரவாக இருப்பதாக தேசிய தகுதிகாண், நுழைவுத் தோ்வு எழுதுவதற்காக கா்நாடகம் வரும் மாணவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

மாணவா்களின் எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது மையங்களிலேயே மாணவா்களை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதேபோல, தங்களின் ஊழியா்களை தனிமைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவா்களைத் தவிர கா்நாடகம் வரும் கேரள மாநில பயணிகள் அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.