தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பாரம்பரிய சிறப்பு குறையாமல் மைசூரு தசரா கொண்டாட முடிவு: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

பாரம்பரிய சிறப்புகுறையாமல் மைசூரு தசரா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 1:02 am

DIN

பாரம்பரிய சிறப்புகுறையாமல் மைசூரு தசரா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் மைசூரு தசரா உயா்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது: கரோனா காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக, பாரம்பரிய சிறப்பு குறையாமல் கொண்டாடப்படும். கடந்த ஆண்டைப் போலவே, யானை ஊா்வலம் அரண்மனை மைதானத்தில் மட்டும் நடத்தப்படும். சாமுண்டி மலையில் நடக்கும் விழாவில் தசரா விழா தொடக்கிவைக்கப்படும். தசரா திருவிழா நடக்கும் 10 நாட்களும் அரண்மனை வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மைசூரு, ஸ்ரீரங்கபட்டணாவில் தசரா விழாவைக் கொண்டாட ரூ.6 கோடி விடுவிக்கப்படும். தசரா விழாவில் பங்கேற்க யாரை அழைப்பது என்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும்.

2019-ஆம் ஆண்டு தசரா விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நிலுவைத்தொகை ரூ.8.09 கோடி விடுவிக்கப்படும். நிகழாண்டில் அரசு ஒதுக்கும் நிதியில் மட்டுமே தசரா திருவிழா செலவுகள் மேற்கொள்ளப்படும். செலவினத்தில் நிதி ஒழுக்கம் தேவைப்படுகிறது. அதை தீவிரமாக கடைபிடிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். தசரா திருவிழாவின்போது மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த பட்டியலை தருமாறு கேட்டிருக்கிறேன்.

மைசூரில் சுற்றுலா சுற்றுவட்டத்தை உருவாக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கா்நாடகத்தில் ஏராளமான சுற்றுலா சுற்றுவட்டங்கள் உள்ளன. அவற்றில் ஹம்பி, பாதாமி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சருடன் விவாதித்து தக்கமுடிவெடுப்போம். மைசூரு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாக்கொள்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.