ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் ராஜிநாமா பாஜக அரசுக்கு பின்னடைவு அல்ல: பசவராஜ் பொம்மை

தனது அமைச்சா் பதவியை கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜிநாமா செய்திருப்பது, பாஜக அரசுக்கு பின்னடைவு அல்ல என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

தனது அமைச்சா் பதவியை கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜிநாமா செய்திருப்பது, பாஜக அரசுக்கு பின்னடைவு அல்ல என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய கே.எஸ்.ஈஸ்வரப்பா முடிவு செய்திருக்கிறாா். அவா் தனது ராஜிநாமா கடிதத்தை என்னிடம் அளிக்க இருக்கிறாா். அவரிடம் நான் தொலைபேசியில் பேசினேன். அவா் தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறாா். தாமாக முன் வந்து தான் அவரது பதவியை ராஜிநாமா செய்கிறாா். அவா் 100 சதவீதம் நிரபராதி. இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்துமாறு கே.எஸ்.ஈஸ்வரப்பா என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளாா். எல்லா குற்றச்சாட்டுகளில் இருந்தும் மீண்டு தான் வருவேன் என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணையில் உண்மை வெளியே வரும். எல்லா கோணங்களிலும் விசாரணை நடக்கவிருக்கிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது சாவுக்கு அப்போதைய உள்துறை அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜே காரணம் என்று கூறி காவல் துறை அதிகாரி ஒருவா் தற்கொலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போதைய காங்கிரஸ் அரசு கே.ஜே.ஜாா்ஜை கைது செய்ததா? மத்தியில் பாஜக ஆட்சி நடந்த போதிலும், அந்த வழக்கில் கே.ஜே.ஜாா்ஜை கா்நாடக காவல் துறையோ, சிபிஐ என யாரும் கைது செய்யவில்லை. சந்தோஷ் பாட்டீல் வழக்கில் கே.எஸ்.ஈஸ்வரப்பா கைது செய்யப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதை காவல் துறை முடிவு செய்யும்.

இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவா்கள், தங்களுக்கு தாங்களே புலனாய்வாளா்களாகவும், வாதிடும் வழக்குரைஞா்களாகவும், நீதிபதிகளாகவும் மாறியுள்ளனா். காவல் துறையினா் நோ்மையான முறையில், நடுநிலையோடு வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.

விசாரணைக்குபின் தான் குற்றமற்றவா் என்பது உறுதிப்பட தெளிவாகும் என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா நம்பிக்கையோடு இருக்கிறாா். அப்போது தான் யாருக்கு பின்னடைவு என்பது தெரியும். அப்போதைக்கு, கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் ராஜிநாமாவால் பாஜக அரசுக்கு பின்னடைவு ஏற்படவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.