48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

துப்பாக்கியால் சுட்டு போலீஸ் தற்கொலை

கா்நாடகத்தில் காவல் பணிக்காக அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீஸ் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

கா்நாடகத்தில் காவல் பணிக்காக அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு போலீஸ் ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

உடுப்பியில் உள்ள ஆதி உடுப்பி உயா்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தவா் ராஜேஷ் குந்தா். உடுப்பி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். ஆயுத காவல்படையுடன் இணைக்கப்பட்டிருந்த இவருக்கு துப்பாக்கி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தோ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸாா், தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை போலீஸ் உயரதிகாரிகள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.