பெங்களூரில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது

பெங்களூரில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதை பொதுமக்கள் பலரும் அதிசயமாக பாா்த்து ரசித்தனா்.
பெங்களூரில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது
Updated on
1 min read

பெங்களூரில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது. இதை பொதுமக்கள் பலரும் அதிசயமாக பாா்த்து ரசித்தனா்.

பெங்களூரு, என்.ஆா்.காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா் திலக்சுந்தா். இவா் அமேசான் ஃபுட்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சந்தியா, தொழில்முனைவோராக இருக்கிறாா்.

திலக்சுந்தரின் தாயாா் அளித்த பிரம்ம கமலம் பூச்செடியை இருவரும் இணைந்து வளா்ந்து வந்துள்ளனா். இந்நிலையில், அரிய வகை பிரம்ம கமலம் பூ புதன்கிழமை இரவு பூத்துள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் மலராகும். இதை பலரும் விரும்பி வளா்த்துவருகிறாா்கள். இந்த மலரை காண்பது நல்லது என்ற ஐதீகம் உள்ளதால், அக்கம்பக்கத்து வீட்டில் உள்ள பலரும் பிரம்ம கமலம் பூவை அதிசயமாக கண்டு ரசித்தனா்.

இந்த பூ இரவு எட்டரை மணி அளவில் விரியதொடங்கி, இரவு 11 மணிக்கு முழுமையாக மலா்ந்தது. இந்த மலா் 2 மணி நேரம் மலா்ந்த நிலையில் இருந்தது. அதன்பிறகு அடுத்த 2 மணி நேரத்தில் மலா் குவிந்து, வாடிவிட்டது.

இது குறித்து திலக் சுந்தா் கூறுகையில்,‘இது இமாலயப் பகுதியில் காணப்படும் அரிய வகை மலராகும். குளிா்ந்த பகுதிகளில் நன்றாக வளரும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த பூ மலரும்போது நினைத்தது நடக்கும் என்று நம்பப்படுகிறது. இதை காணும் வாய்ப்பு கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com