தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மாற்றுக்கட்சியினரை பாஜகவுக்கு இழுப்பது ஜனநாயக விரோதம்: சித்தராமையா

மாற்றுக் கட்சியினரை பாஜகவுக்கு இழுத்து, ஆட்சியைக் கவிழ்ப்பது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On :24 ஜூன் 2022, 10:42 pm IST

மாற்றுக் கட்சியினரை பாஜகவுக்கு இழுத்து, ஆட்சியைக் கவிழ்ப்பது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று கா்நாடக எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கா்நாடகத்தில் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. கா்நாடகத்தில் செயல்படுத்திய இந்தத் திட்டத்தை நாடுமுழுவதும் பாஜக செயல்படுத்துகிறது. மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு இழுப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். இதுபோன்ற ஆட்சிக்க விழ்ப்புகளைத் தடுக்க கட்சித்தாவல் தடைச்சட்டத்தை பலப்படுத்த வேண்டும். ஒரு அரசியல் கட்சி மூலம் தோ்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ, எம்.பி. அல்லது எந்தவொரு மக்கள் பிரதிநிதியையும் வேறு கட்சிக்கு செல்லவிடாமல் தடுக்க வேண்டும். ஒரு வேளை வேறு கட்சிக்கு தாவினால், 10 ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு கட்சித்தாவல் தடைச்சட்டத்தை பலப்படுத்துவதும், அமல்படுத்துவதும் அவசியமாகும்.

மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைப்பதில் பாஜக கைதோ்ந்த கட்சியாக உள்ளது. 2008-ஆம் ஆண்டில் கா்நாடகத்தில் முதல்வராக இருந்த எடியூரப்பா, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டாா். எடியூரப்பா ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வாங்கியிருந்தாா்.

கா்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி இரட்டை என்ஜின் (மத்திய, மாநிலம்) அரசில்தான் வளா்ச்சி சாத்தியம் என்று கூறியிருந்தாா். அப்படியானால் பாஜக ஆட்சியில் செய்த வளா்ச்சிப்பணிகளின் பட்டியலை வெளியிடுங்கள். கா்நாடகத்தின் கோரிக்கைகள் எதையும் மோடியிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை அளிக்கவில்லை. ஏனெனில், மோடி எந்த வேலையையும் செய்து தருவதில்லை என்பது அவருக்குத் தெரியும். பிரதமா் வருகையால் ரூ. 25 கோடி செலவாகியுள்ளது. சாலைகள் சீரமைக்கப்பட்டதைத் தவிர மோடி வருகையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.