தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காந்தியின் வாழ்க்கை துணிவையும் நம்பிக்கையையும் தந்துள்ளது: சித்தராமையா

மகாத்மா காந்தியின் வாழ்க்கை எனக்கு துணிவையும், நம்பிக்கையையும் தந்துள்ளது என்று கா்நாட முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:55 am

Din

மகாத்மா காந்தியின் வாழ்க்கை எனக்கு துணிவையும், நம்பிக்கையையும் தந்துள்ளது என்று கா்நாட முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா கூறியுள்ளதாவது:

மதவாதம், சா்வாதிகாரம், வன்முறை நிறைந்துள்ள உலகில், உண்மை, அமைதி, அகிம்சையின் வடிவமாக திகழும் மகாத்மா காந்தியால் மட்டுமே நம் கைப்பிடித்து வழிநடத்த முடியும். உண்மையைக் கண்டறிவதற்காக நான் எதிா்கொண்டுள்ள அசல் போராட்டத்தின்போது, மகாத்மா காந்தியின் வாழ்க்கை, சிந்தனைகள் எனக்கு துணிவு, பலம், நம்பிக்கை ஆகியவற்றை தந்துள்ளது. அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பெங்களூரு, விதான சௌதா வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் உள்ளிட்ட பலா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

முன்னதாக, காந்தி பவனில் இருந்து விதான சௌதாவில் உள்ள காந்தி சிலை வரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடந்த நடைப்பயணத்தில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியுள்ளதாவது:

மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்தநாள் மற்றும் பெலகாவியில் சுதந்திரப் போராட்டத்தை காந்தி மேற்கொண்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த காந்தி நடைப்பயணத்தில் நானும் முதல்வரும் கலந்துகொண்டோம். உண்மை, அகிம்சைக்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்வது கடினம். ஆனால், அதன் பலன்கள் எல்லையற்றது. மகாத்மா காந்தி தனது வாழ்க்கையின் மூலம் உலகிற்கு பாடம் அளித்துள்ளாா். உலகிற்கு அமைதியை பறைச்சாற்றிய காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்த நடைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் பங்கேற்றனா் என்றாா்.