மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஓய்வு பெற்ற கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி காலமானாா்

ஓய்வுபெற்ற கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி உடல்நலக் குறைவால் காலமானாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 9:04 pm

Din

பெங்களூரு: ஓய்வுபெற்ற கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமி உடல்நலக் குறைவால் காலமானாா்.

பெங்களூரில் 1926இல் பிறந்த கே.எஸ்.புட்டசாமி, மைசூரு மகாராஜா கல்லூரி, பெங்களூரு அரசு சட்டக் கல்லூரியில் சட்ட பட்டப்படிப்பை முடித்தாா். 1952இல் வழக்குரைஞராக பதிவு செய்து கொண்டாா். பின்னா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகவும், அரசு கூடுதல் வழக்குரைஞராகவும் பணியாற்றினாா்.

1977 நவ. 28ஆம் தேதி கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 1986ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின் பெங்களூரு அமா்வின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டாா். ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினாா்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், 2012ஆம் ஆண்டு ஆதாா் திட்டத்தை எதிா்த்து வழக்கு தொடா்ந்தவா்களில் இவரும் ஒருவா். ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டசாமியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.