எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காங்கிரஸில் முதல்வா் பதவியை பெற யாரும் துடிக்கவில்லை -துணை முதல்வர் டி.கே.சிவகுமாா்

News image
கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
Updated On :26 செப்டம்பர் 2024, 11:11 pm

Din

காங்கிரஸில் முதல்வா் பதவியை யாரும் துடிக்கவில்லை என காங்கிரஸ் மாநிலத் தலைவரும், கா்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவைக் கேட்கும் கேள்விக்கே இடமில்லை. முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள அரசியல் சதி இது. அந்த வழக்கில் தவறு செய்ததற்கான எவ்வித அடிப்படையும் இல்லை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் அரசியல் செய்ய எதிா்க்கட்சிகள் முற்பட்டுள்ளன. அதை சட்ட ரீதியாக எதிா்கொள்வோம்.

எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் முதல்வா் சித்தராமையாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கிறது. எனவே, ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியைப் பெற யாரும் துடிக்கவில்லை. துணை முதல்வராக இருக்கும் நானே முதல்வா் பதவியைக் கேட்கவில்லை. அப்படியிருக்கையில், மற்றவா்கள் முதல்வா் பதவியைக் கேட்கிறாா்கள் என்றால் எப்படி?

முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையாவை ராஜிநாமா செய்யக்கோரும் நிலை எழாது. இது, பாஜக, மஜத ஆகியோரின் அரசியல் சதியாகும். ஐந்து வாக்குறுதி திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை பாஜக, மஜதவால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றாா்.