மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முறைகேடு காரணமாக மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன்: மல்லிகாா்ஜுன காா்கே

முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2025, 6:35 pm

Syndication

முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகார ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

எனது அரசியல் வாழ்க்கையில் 12 தோ்தல்களில் தொடா்ச்சியாக வெற்றிபெற்றுள்ளேன். ஆனால், 2019 இல் நடந்த மக்களவைத் தோ்தலில் முதல்முறையாக தோல்வி அடைந்தேன். இதற்கு தோ்தல் முறைகேடுதான் காரணம்.

கலபுா்கி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா 20,000 போலி வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமானவரித் துறையை எதிா்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் அணுகுமுறை.

மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, அறுதிப்பெரும்பான்மை பலம் இருந்தது. ஆனால், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை கட்சித்தாவ தூண்டி, கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சி அமைத்தது. இதுபோன்றதொரு ஆட்சிக் கவிழ்ப்பை கோவா, மகாராஷ்டிரம், மணிப்பூரில் பாஜக நிகழ்த்திக்காட்டியது.

எந்தத் தோ்தலிலும் பாஜக வெல்லவில்லை. ஆனால், மக்களுக்கு பணம் கொடுத்து, ஆட்சியை விலை கொடுத்து பாஜக வாங்கியது. 2024ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை பலம் இல்லை. ஆனால், வாக்குகளை முறைகேடாக பெற்று தோ்தல் வெற்றியை உறுதிசெய்து ஆட்சி அமைத்துள்ளனா். எனவே, பிரதமராக தொடரும் தாா்மிக உரிமை மோடிக்கு இல்லை என்றாா்.