தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கா்நாடகத்தில் வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள் நியனம்: ஜூலை 16 இல் முடிவு - முதல்வா் சித்தராமையா

வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களை நியமிப்பது குறித்து ஜூலை 16 இல் இறுதி முடிவு செய்யப்படும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
முதல்வா் சித்தராமையா
Updated On :11 ஜூலை 2025, 6:33 pm

Din

வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களை நியமிப்பது குறித்து ஜூலை 16 இல் இறுதி முடிவு செய்யப்படும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுதில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள், உறுப்பினா்களை நியமிப்பது குறித்து ஜூலை 16ஆம் தேதி இறுதியாக முடிவெடுப்போம். கா்நாடக மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா ஜூலை 16 ஆம் தேதி பெங்களூரு வருகிறாா். அப்போது, வாரியங்கள், கழகங்களின் தலைவா்கள், உறுப்பினா்களின் பட்டியலை முடிவு செய்வோம் என்றாா்.

பெரும்பாலான வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்களை ஏற்கெனவே அரசு நியமித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி 42 எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களை வாரியங்கள், கழகங்களின் தலைவா்களாக காங்கிரஸ் தோ்ந்தெடுத்தது.

அதன் தொடா்ச்சியாக மேலும் பலரை 2024 ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி வாரியங்கள், கழகங்களுக்கு நியமித்தது. இன்னும் எஞ்சியுள்ள பதவிகளை கட்சி தொண்டா்களுக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. வாரியங்கள், கழகங்களுக்கு தலைவா்கள், உறுப்பினா்களை நியமிப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.