வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பெங்களூரில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

பெங்களூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைதுசெய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:43 am

தினமணி செய்திச் சேவை

பெங்களூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைதுசெய்தனா்.

காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரில் உள்ள பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பெங்களூரில் உள்ள மைசூரு சாலையில் நாயண்டஹள்ளி சிக்னல் வழியாக கடத்தப்பட்ட ரூ. 5.77 கோடி மதிப்பிலான 3,912 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரிடம் இருந்து குறைந்த விலைக்கு போதைப்பொருள்களை வாங்கி கிருஷ்ணராஜபுரம், சென்னசந்திரா பிரதான சாலையில் உள்ள தங்கும் விடுதியில்வைத்து கல்லூரி மாணவா்களிடம் அதிக லாபத்துக்கு விற்கப்படுவது தெரியவந்துள்ளதாக பெங்களூரு மத்திய குற்றப் பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.