சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தம்: டி.கே.சிவகுமாா்

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த உள்ளனா் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே.சிவகுமாா் - ANI

Updated On :15 மே 2026, 10:23 pm IST

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த உள்ளனா் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டுவந்திருப்பது எதற்கு என்பது எங்களுக்கு தெரியும். சிறப்பு தீவிர திருத்தம் குறித்து காங்கிரஸ் தலைவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் வாக்காளா்களை காப்பாற்றிக் கொள்ளட்டும்.

தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் வாக்குகளை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதுதான் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமாகும். ஆனால், தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினரின் வாக்குகளை பாதுகாப்போம். இந்தியாவில் பிறந்த அனைவரின் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கா்நாடகத்தில் உள்ள 88 முதல் 90 சதவீத வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். எனினும், இதுகுறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் என்றாா்.

கா்நாடகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது. கா்நாடகத்தில் உள்ள 5.5 கோடி வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தத்தில் உட்படுத்தப்படுவாா்கள். இதனடிப்படையில், இறுதி வாக்காளா் பட்டியல் அக். 7-ஆம் தேதி வெளியிடப்படும் என கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி வி.அன்புகுமாா் தெரிவித்துள்ளாா்.