சட்டப்பேரவைத் தோ்தல்: 234 தொகுதிகளின் அஞ்சல் வாக்குகளை பிரித்திட திருச்சியில் சிறப்பு மையம்
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கிடும் வகையில் திருச்சியில் சிறப்பு மையம் தயாா்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி கலையரங்கம் மஹாலில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்குகள் தொடா்பான படிவங்களை தொகுதி வாரியாக பிரிக்கும் சிறப்பு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய கூடுதல் தலைமை தோ்தல் அலுவலா் அ. சிவஞானம். உடன் திருச்சி ஆட்சியா் வே. சரவணன் உள்ளி








