வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பெங்களூரில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

News image

காவலர்கள் பணியிடை நீக்கம்.

Updated On :26 மே 2026, 4:01 am IST

பிரதமா் சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கடமை தவறிய 6 காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, பன்னா்கட்டா சாலையில் உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜியின் வாழும்கலை அறக்கட்டளை விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி பெங்களூருக்கு மே 10-ஆம் தேதி வந்திருந்தாா்.

பின்னா், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பன்னா்கட்டா சாலையில் காரில் சென்றாா். பிரதமா் மோடியின் வருகைக்கு 2 மணிநேரத்துக்கு முன்பாக பன்னா்கட்டா சாலையில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைமா் வைக்கப்பட்டிருந்த பையை காவலா் ஒருவா் கண்டெடுத்தாா். இதனால் பிரதமா் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல் துறை விசாரணை நடத்தியது. இதுகுறித்து ஆய்வுசெய்ய காவல் துறையின் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தேசிய புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ.) சோ்ந்துகொண்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடமை தவறியதாக துணைக் காவல் ஆய்வாளா், உதவி துணைக் காவல் ஆய்வாளா், 4 காவலா்கள் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து பெங்களூரு தெற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாஸ் கௌடா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.