புதுச்சேரி, நவ.11: புதுச்சேரியின் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் சுந்தரசண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேராசிரியர் சுந்தரசண்முகனார் புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர். 70 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர், தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். அவருடைய 6 நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அவரைப் பற்றிய குறுந்தகடு பேராசிரியர் சுந்தரசண்முகனார் அறக்கட்டளையினரால் பேராசிரியரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்த குறுந்தகட்டினை முன்னாள் புதுச்சேரி சட்டத்துறைச் செயலர் வயி.நாராயணசாமி வெளியிட்டார். அறக்கட்டளை துணைத் தலைவர் புலவர் வி.திருவேங்கடம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரெஞ்சுப் பேராசிரியர் க.சச்சிதானந்தம், அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் சு.ச.சரவணன், செயலர் சு.வேல்முருகன், குறுந்தகட்டினை உருவாக்கிய செ.இலக்குவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.